sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

46 ஆண்டாக எரிந்த விளக்குகள் அணைந்ததால் மக்கள் கலக்கம்

/

46 ஆண்டாக எரிந்த விளக்குகள் அணைந்ததால் மக்கள் கலக்கம்

46 ஆண்டாக எரிந்த விளக்குகள் அணைந்ததால் மக்கள் கலக்கம்

46 ஆண்டாக எரிந்த விளக்குகள் அணைந்ததால் மக்கள் கலக்கம்

2


ADDED : பிப் 08, 2025 06:40 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:40 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகன்னடா: சிகள்ளி கிராமத்தில், தீபநாதேஸ்வரா கோவிலில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணெய் இல்லாமல், திரி இல்லாமல் எரிந்து கொண்டிருந்த மூன்று விளக்குகள், திடீரென அணைந்துள்ளன. இதனால் கர்நாடகாவுக்கு கெடுதல் ஏற்படுமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.

உத்தர கன்னடா மாவட்டம், முண்டகோடு தாலுகாவின் சிகள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சாரதம்மா. இவர் தீபநாதேஸ்வரா கோவிலில், 1979ல் மண்ணெண்ணெய் ஊற்றி, ஒரு சிம்னி விளக்கை ஏற்றி வைத்தார். இந்த விளக்கு அணையவே இல்லை.

எண்ணெய், திரி இல்லாமலேயே தொடர்ந்து எரிந்தது. இதை பார்த்து ஆச்சரியமடைந்த அவர், 1980ல் மற்றொரு விளக்கை ஏற்றினார்.

இரண்டாவது விளக்கும் அணையாமல் எரிந்தது. இந்த விளக்கை ஏற்றிய இரண்டு வாரங்களுக்கு பின், மூன்றாவதாக விளக்கை ஏற்றினார். அதிசயதக்க வகையில், மூன்று விளக்குகளும் தொடர்ந்து எரிந்தன.

கடந்த 1979 முதல் 2025 பிப்ரவரி வரை, 46 ஆண்டுகள் எண்ணெய் இல்லாமல், திரி இல்லாமல் எரிந்து கொண்டிருந்தன. இது கடவுளின் அருள் என, மக்கள் நம்பினர்.

விளக்குகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை, அர்ச்சகர் வெங்கடேஷ் ஏற்றிருந்தார். அவர் 14 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதன் காரணமாக, கோவில் நடைமூடப்பட்டிருந்தது.

நேற்று முன் தினம் நடை திறந்தபோது, மூன்று விளக்குகளும் அணைந்திருந்தன. 46 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருந்த விளக்குகள் திடீரென அணைந்ததால், கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

மாநிலத்துக்கு கெடுதல் நடக்குமோ என, அஞ்சுகின்றனர். இதே பயத்தில் கோவில் நடையை மீண்டும் மூடிவிட்டனர். பக்தர்கள் தரிசனத்துக்கும் வாய்ப்பு அளிக்கவில்லை.






      Dinamalar
      Follow us