sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அதிகாரப் பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர்; மோடி பேட்டி

/

அதிகாரப் பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர்; மோடி பேட்டி

அதிகாரப் பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர்; மோடி பேட்டி

அதிகாரப் பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர்; மோடி பேட்டி

5


UPDATED : நவ 25, 2024 11:22 AM

ADDED : நவ 25, 2024 11:18 AM

Google News

UPDATED : நவ 25, 2024 11:22 AM ADDED : நவ 25, 2024 11:18 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர்' என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவ.,25) முதல் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2024ம் ஆண்டு கடைசி கூட்டத் தொடர் இது. இந்த கூட்டத்தொடரை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும். நாளை 75வது அரசியலமைப்பு தினம் பார்லிமென்டில் கொண்டாடப்படும். பார்லிமென்டில் ஆக்கபூர்வமான விவாதம் நடக்கும் என்று நம்புகிறேன்.

கண்ணியம்

பார்லிமென்டில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அவசியம். தங்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க மக்கள் நம்மை தேர்வு செய்து அனுப்பி உள்ளனர். விவாதத்தில் அதிகமான எம்பிக்கள் பங்கேற்க வேண்டும். பார்லிமென்டின் பாரம்பரியம், கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும். கூட்டத்தொடரை சமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். ஆக்கபூர்வமான பார்லிமென்ட் கூட்டத்திற்காக காத்திருக்கிறேன்.

அதிகார பசி

அரசியலமைப்பு சட்டம் கொண்டுவரப்பட்டு 75 ஆண்டுகள் முடிவடையும் நிலையில், கூட்டத்தொடர் நடப்பது சிறப்பு. பார்லிமென்டில் மக்களுக்காக காங்கிரஸ் கட்சி எப்போதும் பேசியதில்லை. அதிகார பசி கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர். பார்லிமென்ட் நடவடிக்கைகளை சீர்குலைக்க சில கட்சிகள் முயற்சிக்கின்றன. மக்களால் நிராகரிக்கப் பட்டவர்கள் பார்லிமென்டில் அமளியில் ஈடுபடுகின்றனர். கூட்டத்தொடருக்கு இடையூறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us