
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணிப்பூரில் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையின் போது பிரதமர் நரேந்திர மோடி ஏன் இங்கு வரவில்லை என மக்கள் எங்களிடம்
கேட்கின்றனர். இது குறித்து பார்லி.,யில் ராகுல் கேள்வி எழுப்ப
வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். ஜெய்ராம் ரமேஷ்பொதுச்செயலர், காங்.,
சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
கோயில்களை சுத்தமாக
வைத்திருக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி மஹாராஷ்டிராவில் உள்ள கலெக்டர்கள் அந்தந்த மாவட்டங்களில் அனைத்து கோயில்களிலும்,
துாய்மை இயக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
ஏக்நாத் ஷிண்டே
மஹாராஷ்டிரா முதல்வர், சிவசேனா
இப்போது ஞாபகம் வருதா
எப்போது தேர்தல் வருகிறதோ
அப்போது தான் பா.ஜ.,விற்கு
பழங்குடியினரைப்
பற்றிய நினைவு வரும். கடந்த 10 ஆண்டுகளாக பழங்குடியினர்
நலனுக்காக பா.ஜ.,
என்ன செய்தது என்பதை கேட்க விரும்புகிறேன்.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்கிரஸ்