sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

" மோடியே பிரதமராக தொடர மக்கள் விருப்பம்" - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா பேட்டி

/

" மோடியே பிரதமராக தொடர மக்கள் விருப்பம்" - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா பேட்டி

" மோடியே பிரதமராக தொடர மக்கள் விருப்பம்" - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா பேட்டி

" மோடியே பிரதமராக தொடர மக்கள் விருப்பம்" - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா பேட்டி

29


UPDATED : ஏப் 26, 2024 11:27 AM

ADDED : ஏப் 26, 2024 11:01 AM

Google News

UPDATED : ஏப் 26, 2024 11:27 AM ADDED : ஏப் 26, 2024 11:01 AM

29


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: மோடியே பிரதமர் பதவியில் தொடர மக்கள் விரும்புவதாக பெங்களூருவில் வரிசையில் நின்று ஓட்டளித்தப்பின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

வரிசையில் நின்றார்


கர்நாடகாவில் 14 தொகுதிகளில் இன்று (ஏப்.,26) லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வாக்காளர்கள் காலை 7 மணியில் இருந்தே ஆர்வமுடன் வாக்களித்தனர். இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் உள்ள ஓட்டுச்சாவடியில் வரிசையில் நின்று தனது ஓட்டினை பதிவு செய்தார்.

ஓட்டளித்த பிறகு நிர்மலா சீதாராமன் கூறியதாவது: மோடியே பிரதமர் பதவியில் தொடர மக்கள் விரும்புகின்றனர். இன்னும் ஏராளமான மக்கள் ஓட்டுச்சாவடிக்கு வந்து தங்களது ஓட்டினை பதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நிலையான ஆட்சி, சிறந்த கொள்கைகள், சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சியை மக்கள் விரும்புகின்றனர்.

1968க்கு முன்பாக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மக்கள் சம்பாதித்ததில் 90 சதவீதத்தை வரியாக செலுத்தினார்கள். அதெல்லாம் இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது. இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அதே நிலைக்கு திரும்புவோம்.

வாரிசுரிமை வரியால் நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களை நேரடியாக பாதிக்கும். இந்தியாவை முன்னோக்கி செல்வது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது போன்ற எதையும் பேசாமல், பிரதமர் மோடியை காங்கிரஸ் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் தாக்கி பேசி வருகிறது.






      Dinamalar
      Follow us