sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வேலை செய்ய விரும்பாத மக்கள்: இலவசங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை

/

வேலை செய்ய விரும்பாத மக்கள்: இலவசங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை

வேலை செய்ய விரும்பாத மக்கள்: இலவசங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை

வேலை செய்ய விரும்பாத மக்கள்: இலவசங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை

24


ADDED : பிப் 12, 2025 03:12 PM

Google News

ADDED : பிப் 12, 2025 03:12 PM

24


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இலவச திட்டங்கள் அறிவிப்பது என்பது, பொது மக்கள் வேலைக்கு செல்வதை தடுக்கிறது எனக்கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், அவர்கள் நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க வேண்டாமா என கேள்வி எழுப்பியது.

நகர்ப்புறங்களில் வீடில்லாதவர்களுக்கு முகாம்கள் அமைப்பது தொடர்பான தொடரப்பட்ட பொது நல வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் ஆகஸ்டின் ஜார்ஜ் மசியா அமர்வு விசாரித்தது.

அப்போது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி கூறியதாவது: நகர்ப்புற வீடற்றவர்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாக கொண்ட நகர்ப்புற வறுமை ஒழிப்பு திட்டத்தை இறுதி செய்யும் பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது என்றார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், இந்த திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி என உத்தரவிட்டனர். மேலும், அவர்கள், ' துரதிர்ஷ்டவசமாக, இலவச திட்டங்களினால் மக்கள் வேலை செய்ய விரும்புவது கிடையாது. அவர்களுக்கு ரேசன் பொருட்கள் இலவசமாகவே கிடைக்கிறது. எந்த வேலையும் செய்யாமல், பணமும் கிடைக்கிறது. அவர்கள் மீதான உங்களின் அக்கறையை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால், அவர்கள் சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைந்து, நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க அனுமதிப்பது நல்லது அல்லவா' எனக்கூறினர்.






      Dinamalar
      Follow us