sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நிலநடுக்கத்தால் பெரியாறு அணை சேதம் : கேரள அதிகாரிகளின் அடுத்தகட்ட நாடகம்

/

நிலநடுக்கத்தால் பெரியாறு அணை சேதம் : கேரள அதிகாரிகளின் அடுத்தகட்ட நாடகம்

நிலநடுக்கத்தால் பெரியாறு அணை சேதம் : கேரள அதிகாரிகளின் அடுத்தகட்ட நாடகம்

நிலநடுக்கத்தால் பெரியாறு அணை சேதம் : கேரள அதிகாரிகளின் அடுத்தகட்ட நாடகம்


ADDED : ஜூலை 30, 2011 04:20 AM

Google News

ADDED : ஜூலை 30, 2011 04:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர் : 'நிலநடுக்கத்தால், பெரியாறு அணை சேதமடைந்துள்ளது' என, கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள், புகார் கூறியதுடன், தடையை மீறி, கேரள நிருபர்களை, அணைப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

இடுக்கி அணை அருகே, கடந்த சில நாட்களுக்கு முன், நிலநடுக்கம் ஏற்பட்டது. இடுக்கி அணைக்கும், பெரியாறு அணைக்கும் இடையே, 60 கி.மீ., தூரம் உள்ளது. இருந்த போதிலும், இடுக்கி அணை அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பெரியாறு அணையில், சேதம் ஏற்பட்டுள்ளது என்ற புகாரை, கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள், கூறத் துவங்கியுள்ளனர்.



பாதிப்பு? கேரள நீர்ப்பாசன செயற்பொறியாளர் ஜார்ஜ் டேனியல் தலைமையில், அதிகாரிகள் குழு, தடையை மீறி, கேரள நிருபர்களை அணைப்பகுதிக்கு, ஜீப்பில் அழைத்துச் சென்றனர். அணையின் மேல்பகுதியில், சாதாரணமாக சிமென்ட் உதிர்ந்துள்ள இடத்தை, 'குளோசப்பில்' படம் எடுத்து, நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக, செய்தியை வெளியிடச் செய்துள்ளனர்.

திசை திருப்ப முயற்சி: சுப்ரீம் கோர்ட் பரிந்துரையின்படி, ஐவர் குழுவினரால், அணைப் பகுதியில் ஆய்வுப் பணிகள் நடக்கின்றன. மாதிரி எடுப்பதற்காக, 3 இடங்களில் அடையாளம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், பிரச்னையை திசை திருப்பும் முயற்சியில், கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி, அணைப் பகுதிக்கு கேரள நிருபர்களை அழைத்து வந்தது குறித்து, அணையிலிருந்த தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.








      Dinamalar
      Follow us