sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பி.எப்., வட்டி விகிதம் 8.25 சதவீதமாக மீண்டும் நிர்ணயம்; 7 கோடி பேருக்கு பயன்

/

பி.எப்., வட்டி விகிதம் 8.25 சதவீதமாக மீண்டும் நிர்ணயம்; 7 கோடி பேருக்கு பயன்

பி.எப்., வட்டி விகிதம் 8.25 சதவீதமாக மீண்டும் நிர்ணயம்; 7 கோடி பேருக்கு பயன்

பி.எப்., வட்டி விகிதம் 8.25 சதவீதமாக மீண்டும் நிர்ணயம்; 7 கோடி பேருக்கு பயன்


ADDED : மே 24, 2025 06:07 PM

Google News

ADDED : மே 24, 2025 06:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நடப்பு நிதியாண்டிற்கான பி.எப்., வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இதனால் 7 கோடி சந்தாதாரர்கள் பயனடைவார்கள்.

நாடு முழுதும் தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பணி நிறைவில் பணப்பலன் உள்ளிட்டவை வழங்கும் வகையில், ஈ.பி.எப்.ஓ., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுகிறது.

கடந்த 2021 - 22ம் ஆண்டுக்கான வட்டி விகிதம், 2022 மார்ச்சில் அறிவிக்கப்பட்டது. அப்போது 8.10 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 2023- 24ம் நிதியாண்டில், 8.15 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டிற்கான பி.எப்., வட்டி விகிதத்தை மீண்டும் 8.25 சதவீதமாக மத்திய அரசு நிர்ணயத்துள்ளது. இதனால் 7 கோடி சந்தாதாரர்கள் பயனடைவார்கள். இதன் வாயிலாக 7 கோடிக்கும் அதிகமானவர்கள் பயனடைவர். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது, பயனாளர்களின் கணக்குகளில் வட்டி தொகை விரைவில் வரவு வைக்கப்படும்.






      Dinamalar
      Follow us