sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிளஸ் டூ மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 23 பேர் மீது வழக்கு

/

பிளஸ் டூ மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 23 பேர் மீது வழக்கு

பிளஸ் டூ மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 23 பேர் மீது வழக்கு

பிளஸ் டூ மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 23 பேர் மீது வழக்கு

2


ADDED : ஏப் 07, 2025 08:37 PM

Google News

ADDED : ஏப் 07, 2025 08:37 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாரணாசி: உ.பி. மாநிலம் வாரணாசியில் 12 ஆம் வகுப்பு மாணவியை, 7 நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் 23 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உ.பி. மாநிலம் வாரணாசியை சேர்ந்த ஒரு பிளஸ் டூ மாணவி, கடந்த மார்ச் அன்று பிஷாச்மோச்சன் பகுதியில் உள்ள ஹூக்கா பாருக்கு நண்பருடன் சென்றுள்ளார். அதன் பிறகு அந்த மாணவி காணாமல் போனதாக, அவரது குடும்பத்தினர் அளித்த புகார் அடிப்படையில், 23 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட பெண் விளையாட்டு குறித்த பாடப்பிரிவில் சேர்ந்து படிப்பதற்காக தயாராகி இருக்கிறார். அதனை தொடர்ந்து இங்குள்ள ஒரு கல்லுாரியில் ஓட்டப் பயிற்சிக்காக தவறாமல் சென்று வந்துள்ளார்.

கடந்த மார்ச்-29 அன்று, ஒரு நண்பர், அந்த பெண்ணை பிஷாச்மோச்சன் பகுதியில் உள்ள ஒரு ஹூக்கா பாருக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்களுடன் மேலும் சிலர் சேர்ந்து கொண்டு, அந்த மாணவிக்கு, குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்தனர். அதை தொடர்ந்து அந்த மாணவியை சிக்ரா பகுதியில் உள்ள பல்வேறு ஹோட்டல்களுக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு அவர்கள், மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த மார்ச் 29 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெற்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

புகாரின் அடிப்படையில், 23 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். விசாரணையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 11 பேர் அடையாளம் காணப்படவில்லை. மற்றவர்களை தேடி வருகிறோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us