sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பா.ஜ., வெற்றி பெற்றால் டில்லியில் குடிசைகள் அகற்றப்படாது; பிரதமர் மோடி உறுதி

/

பா.ஜ., வெற்றி பெற்றால் டில்லியில் குடிசைகள் அகற்றப்படாது; பிரதமர் மோடி உறுதி

பா.ஜ., வெற்றி பெற்றால் டில்லியில் குடிசைகள் அகற்றப்படாது; பிரதமர் மோடி உறுதி

பா.ஜ., வெற்றி பெற்றால் டில்லியில் குடிசைகள் அகற்றப்படாது; பிரதமர் மோடி உறுதி

10


ADDED : பிப் 02, 2025 05:12 PM

Google News

ADDED : பிப் 02, 2025 05:12 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், குடிசைகள் அகற்றப்படாது என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.

வரும் 5ம் தேதி நடைபெறும் டில்லி சட்டசபை தேர்தலையொட்டி, ஆர்.கே.புரம் பகுதியில் நடந்த பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், எந்தவொரு மக்கள் நலத்திட்டங்களும் நிறுத்தப்படாது. பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் இணைந்து செயல்படுவோம். எந்தவொரு பயனுள்ள திட்டங்களையும் ரத்து செய்ய மாட்டோம்.

டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், குடிசைகள் அகற்றப்படாது. இந்த அறிவிப்பை வெற்று பேச்சுக்காக அறிவிக்கவில்லை. ஆனால், ஆம்ஆத்மி குடிசை விவகாரத்தில் பொய் தகவலை பரப்புகின்றனர்.

பூர்வாஞ்சலி மற்றும் பிஹாரி சமூக மக்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஏனெனில், நான் பூர்வாஞ்சல் தொகுதி எம்.பி.,யாக இருந்துள்ளேன். கோவிட் சமயத்தில் சில கட்சிகள் அவர்களை மோசமாக நடத்தினார்கள். டில்லியை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள். ஆனால், பா.ஜ., எப்போதும், பூர்வாஞ்சல் மற்றும் பிஹார் மக்களுக்கு ஆதரவாக இருக்கும்.

பிஹாரில் உள்ளூர் விவசாயிகளின் நலனுக்காக மஹானா போர்டு உருவாக்கப்பட்டது. மஹானா சாகுபடியில் தலித் குடும்பத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். எப்போது எல்லாம் தலித் மக்களுக்கான நலத்திட்டங்களை நான் அறிவிக்கிறனோ, அப்போது எல்லாம், எதிர்க்கட்சிகள் என்னை கேலி செய்கின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us