sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி திரும்பினார் பிரதமர் மோடி: ஷாங்காய் மாநாடு பயனுள்ளது என பெருமிதம்

/

டில்லி திரும்பினார் பிரதமர் மோடி: ஷாங்காய் மாநாடு பயனுள்ளது என பெருமிதம்

டில்லி திரும்பினார் பிரதமர் மோடி: ஷாங்காய் மாநாடு பயனுள்ளது என பெருமிதம்

டில்லி திரும்பினார் பிரதமர் மோடி: ஷாங்காய் மாநாடு பயனுள்ளது என பெருமிதம்

4


ADDED : செப் 01, 2025 09:49 PM

Google News

4

ADDED : செப் 01, 2025 09:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு பயனுள்ளதாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி லிட் பீரோ உறுப்பினர் காய் குய், நேபாள பிரதமர் ஒலிசர்மா, வியட்நாம் பிரதமர் பாம்மின்சின் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

இந் நிலையில் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று தலைநகர் டில்லி திரும்பினார். தமது அரசு முறை பயணம் குறித்து அவர் எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;

இந்த பயணம் பயனுள்ளதாக இருந்தது. சீனாவில் ஷாங்காய் உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் பலரை சந்தித்து உரையாடினேன். அவர்களிடம் உலகளாவிய முக்கிய பிரச்னைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்தினேன்.

உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டிய சீன அதிபர் ஜி ஜின்பிங், அந்நாட்டு அரசாங்கம் மற்றும் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us