sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவச திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

/

 சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவச திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

 சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவச திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

 சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவச திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

1


UPDATED : மார் 01, 2026 03:01 AM

ADDED : மார் 01, 2026 01:53 AM

Google News

1

UPDATED : மார் 01, 2026 03:01 AM ADDED : மார் 01, 2026 01:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்ப்பூர்: கர்ப்பப்பை வாய் புற்றுநோயில் இருந்து பெண்களை பாதுகாக்கும் நோக்கில், 14 வயது சிறுமியருக்கான, நாடு தழுவிய, எச்.பி.வி., எனப்படும், 'மனித பாப்பிலோமா வைரஸ்' இலவச தடுப்பூசி திட்டத்தை, ராஜஸ்தானின் அஜ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.

ராஜஸ்தானில் முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அஜ்மீர் மாவட்டத்துக்கு நேற்று வந்த பிரதமர் மோடி, 16,680 கோடி ரூபாய் மதிப் புள்ள நலத்திட்டங்களை துவக்கி வைத்தார்.

மேலும், நாடு முழுதும், 14 வயது சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இலவச தடுப்பூசி திட்டத்தையும் துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், 'கார்டசில் 4' என்ற தடுப்பூசி ஒருமுறை செலுத்தப்படும். இது, க ர்ப்பப்பை வாய் புற்று நோயை உண்டாக்கும் எச்.பி.வி., வைரஸ் வகை கள் 16 மற்றும் 18-க்கு எதிராகவும், அதேபோல், வகைகள் 6 மற்றும் 11-க்கு எதிராகவும் பாதுகாப்பு அளிக்கிறது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், ஆண்டுதோறும், 1.15 கோடி சிறுமியருக்கு இந்த தடுப்பூசியை இலவசமாக செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படும்.

தடுப்பூசி செலுத்தி கொள்வது கட்டாயமல்ல. பெற்றோர் அல்லது பாது காவலரின் சம்மதத்தை பெற்ற பின்னரே தடுப்பூசி செலுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம், இந்த தடுப்பூசியை அறிமுகப்படுத்திய நாடுகளின் பட்டியலில் நம் நாடும் இணைந்துள்ளது.

14 வயது ஏன் முக்கியம்? எச்.பி.வி., வைரஸ், உடலில் ஏற்படுவதற்கு முன்பே தடுப்பூசி போடுவது தான் மிகச்சிறந்தது. 14 வயதில் தடுப்பூசி செலுத்துவது சிறுமியருக்கு நீண்ட கால நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதோடு, எதிர் காலத்தில் அவர்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது. இது குறித்த உலகளாவிய மற்றும் இந்திய ஆய்வுகள், 14 வயது சிறுமியருக்கு இந்த தடுப்பூசி வலிமையான பாதுகாப்பை தருவதாக தெரிவிக்கின்றன.



நாட்டின் நற்பெயரை கெடுக்க காங்., முயற்சி: பிரதமர் தாக்கு அஜ்மீரில், வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது: நம் நாட்டை உலகம் புகழும்போது ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுகின்றனர். ஆனால், காங்கிரசால் மட்டும் அதை ஜீரணிக்க முடியவில்லை. டில்லி ஏ.ஐ., உச்சி மாநாட்டில், வெளிநாட்டு பிரதிநிதிகள் முன்னிலையில், நம் நாட்டின் நற்பெயரை கெடுக்க காங்., முயன்றது. என்ன மாதிரியான மனநிலை இது? தொடர் தேர்தல் தோல்விகளால் கடும் விரக்தியில் உள்ள அக்கட்சி, நாட்டுக்கு இழுக்கு ஏற்படுத்த முயற்சிக்கிறது. காங்., தற்போது, முஸ்லிம் லீக் -மாவோயிஸ்ட் காங்., ஆக மாறி விட்டது. நம் நாடு பிரிக்கப்பட முஸ்லிம் லீக் ஒரு காரணமாக இருந்தது. இன்று காங்கிரசும் அதே வழியில் செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us