இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுங்க; மோடிக்கு உமர் அப்துல்லா வேண்டுகோள்!
இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுங்க; மோடிக்கு உமர் அப்துல்லா வேண்டுகோள்!
ADDED : செப் 30, 2024 09:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்: 'பாலஸ்தீனம், லெபனானில் மக்கள் ரத்தம் சிந்துவதை நிறுத்த, இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும்' என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் பாரமுல்லாவில் நடந்த நிகழ்ச்சியில், உமர் அப்துல்லா பேசியதாவது: பாலஸ்தீனத்திலும் அல்லது லெபனான் நாட்டிலும் மக்களைக் கொல்வதை நிறுத்துமாறு பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு அழுத்தம் தர வேண்டும்.
கொலைகளை நிறுத்துங்க!
இன்று ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்கள் பற்றிய செய்திகள் தினமும் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு பா.ஜ., எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது. தங்கள் ஆட்சியில் பா.ஜ., மக்களுக்கு எதையும் செய்யவில்லை. இதனால் அவர்கள் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸைக் குறை கூறுவார்கள்.