sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை: பிரதமர் மோடி பெருமிதம்

/

லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை: பிரதமர் மோடி பெருமிதம்

லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை: பிரதமர் மோடி பெருமிதம்

லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை: பிரதமர் மோடி பெருமிதம்

12


ADDED : அக் 29, 2024 11:49 AM

Google News

ADDED : அக் 29, 2024 11:49 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கும் பணி தொடர்ந்து நடக்கிறது' என பிரதமர் மோடி தெரிவித்தார்.

மத்திய அரசு வேலைக்கான நியமன கடிதங்களை, 51 ஆயிரம் பேருக்கு இன்று(அக்.,29) பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக வழங்கினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அடி எடுத்து வைக்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. அரசின் கொள்கைகள் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.



தனி அடையாளம்

பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களில், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டு வருகின்றன. ஹரியானாவில் பா.ஜ., அரசுக்கு என தனி அடையாளம் உள்ளது. ஹரியானாவில் புதிய அரசு அமைந்ததும் 26 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. எந்த செலவும் இல்லாமல் அரசு வேலை கிடைத்துள்ளது. குறிப்பாக, பணிநியமன ஆணை பெற்ற, ஹரியானா மாநில இளைஞர்களை வாழ்த்துகிறேன்.

தீபாவளி கொண்டாட்டம்

இந்த பண்டிகை காலக்கட்டத்தில், 51 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலைக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டே நாட்களில், தீபாவளியைக் கொண்டாடுவோம். இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு வாய்ந்தது. 500 ஆண்டுகளுக்குப் பிறகு, அயோத்தியில் உள்ள தனது பிரமாண்ட கோவிலில் ராமர் அமர்ந்திருக்கிறார். அவரது பிரமாண்டமான கோவிலில் கொண்டாடப்படும் முதல் தீபாவளியாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.






      Dinamalar
      Follow us