ADDED : ஜூலை 14, 2026 04:34 AM

ஹைதராபாத்: தெலுங்கானாவில், மனைவி, மகன்கள் உட்பட ஆறு பேரை கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த போக்சோ குற்றவாளி ராஜ்குமார் தற்கொலை செய்துகொண்டார்.
தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஷபாத் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.
போக்சோ வழக்கில் கைதான இவர், சமீபத்தில், ஜாமினில் வந்தான். கடந்த 10ம் தேதி, தன் மனைவி, இரு மகன்கள், சிறைக்கு செல்ல காரணமாக இருந்த 17 வயது சிறுமி உட்பட ஆறு பேரை கொடூரமாக கொன்றார்.
கொலை குறித்து விசாரணை நடத்திய போலீசார், தப்பிய ராஜ்குமாரை தேடி வந்தனர்.
இந்நிலையில், கொத்துார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், ராஜ்குமார் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரின் உடல் அருகே இருந்த பூச்சிக் கொல்லி மருந்து பாட்டிலும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
