ADDED : மார் 30, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே ஆலுவா பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, அப்பகுதி பள்ளியில் நேற்று முன்தினம் 10ம் வகுப்பு தேர்வு எழுதினார். வகுப்பறையை விட்டு வெளியே வந்த மாணவி, திடீரென மயங்கி விழுந்தார். அருகிலுள்ள மருத்துவமனையில் பரிசோதித்ததில், அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஆலுவா போலீசார் விசாரணையில் மாணவியை காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக்கிய குன்னுக்கரையை சேர்ந்த கல்லுாரி மாணவர் என, தெரியவந்தது. அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.