sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எதிர்க்கட்சி தலைவர் உட்பட 43 பேர் மீது போலீசில் புகார்

/

எதிர்க்கட்சி தலைவர் உட்பட 43 பேர் மீது போலீசில் புகார்

எதிர்க்கட்சி தலைவர் உட்பட 43 பேர் மீது போலீசில் புகார்

எதிர்க்கட்சி தலைவர் உட்பட 43 பேர் மீது போலீசில் புகார்


ADDED : ஜன 05, 2024 05:10 AM

Google News

ADDED : ஜன 05, 2024 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹுப்பள்ளி : போலீஸ் நிலையம் முன் போராட்டம் நடத்தியபோது, முதல்வர் சித்தராமையாவை தரக்குறைவாக விமர்சித்ததாக, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உட்பட 43 பேர் மீது போலீசில், காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

ஹுப்பள்ளியில் 31 ஆண்டுகளுக்கு முன்பு, ராமஜென்ம பூமி விவகாரத்தில் போராட்டம் நடத்திய வழக்கில், ஸ்ரீகாந்த் பூஜாரி என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனால் அரசை கண்டித்து, பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் ஹுப்பள்ளி சகாரா போலீஸ் நிலையம் முன், எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தலைமையில், பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். அப்போது அரசு எதிராக கோஷம் எழுப்பியவர்கள், முதல்வர் சித்தராமையாவை தரக்குறைவாக விமர்சித்துப் பேசினர்.

இதுகுறித்து, ஹுப்பள்ளி நகர காங்கிரஸ் தலைவர் அல்தாப் ஹல்லுார், சகாரா போலீஸ் நிலையத்தில், எதிர்க்கட்சித் தலைவர் அசோக், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் அரவிந்த் பெல்லத், மகேஷ் தெங்கினகாய் உட்பட 43 பேர் மீது, நேற்று புகார் செய்தார்.






      Dinamalar
      Follow us