sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போக்குவரத்து விதி மீறிய ரிக் ஷாக்கள் 2.3 லட்சம் ரசீதுகள் போலீசார் வழங்கினர்

/

போக்குவரத்து விதி மீறிய ரிக் ஷாக்கள் 2.3 லட்சம் ரசீதுகள் போலீசார் வழங்கினர்

போக்குவரத்து விதி மீறிய ரிக் ஷாக்கள் 2.3 லட்சம் ரசீதுகள் போலீசார் வழங்கினர்

போக்குவரத்து விதி மீறிய ரிக் ஷாக்கள் 2.3 லட்சம் ரசீதுகள் போலீசார் வழங்கினர்


ADDED : ஜூன் 20, 2025 08:45 PM

Google News

ADDED : ஜூன் 20, 2025 08:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:'டில்லியில், இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை, போக்குவரத்து விதிகளை மீறியதாக, 2.3 லட்சம் ரசீதுகள், வழங்கப்பட்டுள்ளன' என, போக்குவரத்து துறை சிறப்பு கமிஷனர் அஜய் சவுத்ரி கூறினார்.

டில்லியில் அவர் கூறியதாவது:

சில சுறுசுறுப்பான வழித்தடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு, அந்த பகுதியில் சிலரால் ஏற்படுத்தப்படும் போக்குவரத்து விதி மீறல் தான் காரணம். அதை அறிந்து, அந்த சாலையை பயன்படுத்துவோருக்கு அவ்வப்போது அறிவுறுத்தல் செய்து வருகிறோம்.

குறிப்பாக, இ-ஆட்டோ ரிக் ஷாக்களை இயக்குபவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். அந்த வகையில், சாலையில் பார்க்கிங், நுழைய கூடாத வழியில் நுழைதல், உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவது உள்ளிட்ட குற்றங்களுக்காக, 2.30 லட்சம் ரசீதுகள் இ-ரிக் ஷா ஓட்டுனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து குற்றங்களுக்காக இதுவரை, 1, 260 இ-ரிக் ஷாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய நபர்கள், உரிமம் இல்லாமல் ரிக் ஷாக்களை இயக்கிய குற்றங்களுக்காகவும், மதுபானம் அருந்தி வாகனங்களை இயக்கியதற்காகவும் இந்த ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.






      Dinamalar
      Follow us