sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போலீஸ் வினாத்தாள் கசிவு தலைமறைவு நபர் சிக்கினார்

/

போலீஸ் வினாத்தாள் கசிவு தலைமறைவு நபர் சிக்கினார்

போலீஸ் வினாத்தாள் கசிவு தலைமறைவு நபர் சிக்கினார்

போலீஸ் வினாத்தாள் கசிவு தலைமறைவு நபர் சிக்கினார்


ADDED : ஜூன் 22, 2025 09:03 PM

Google News

ADDED : ஜூன் 22, 2025 09:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முசாபர்நகர்:உ.பி.,யில், போலீஸ் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் தேர்வின் வினாத்தாளை கசிய விட்ட வழக்கில், தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 17, 18ம் தேதிகளில், உத்தர பிரதேச போலீஸ் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான தேர்வு நடைபெற இருந்தது. முதல் நாளில், அந்த தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது. இது தொடர்பாக, ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த அஜய் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

கடந்த ஆண்டு, பிப்ரவரி 24ம் தேதி அந்த தேர்வை ரத்து செய்த உ.பி., அரசு, ஆறு மாதங்களுக்குள் மறு தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. வினாத்தாளை கசிய விட்டதாக, அஜய் என்பவரை சிறப்பு விசாரணை குழு போலீசார் தேடி வந்தனர்.

அவர் பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு, 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவரை, நேற்று முன்தினம் முசாபர்நகரில் போலீசார் கைது செய்தனர்.

கைதான அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.






      Dinamalar
      Follow us