ம.பி.,யில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற போலீஸ் டிராக்டர் ஏற்றி கொலை
ம.பி.,யில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற போலீஸ் டிராக்டர் ஏற்றி கொலை
ADDED : மே 05, 2024 12:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போபால்: ம.பி.,யில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற உதவி சப் இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொன்று நிகழ்வு அரங்கேறி உள்ளது.
ம.பி., மாநிலம் ஷெதோல் பகுதியில் ஆற்றில் டிராக்டர் மூலம் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உதவி சப் இன்ஸ்பெக்டர் மகேந்திர பக்ரி என்பவர் இரண்டு போலீசாருடன் சென்று தடுக்க முயன்றார். அப்போது, மகேந்திர பக்ரி மீது, மணல் கடத்தியவர்கள் டிராக்டரை ஏற்றினர்.
இதில் மகேந்திர பக்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவர் காயமின்றி உயிர் தப்பினர். அவர்கள் அளித்த தகவல்படி, உயிரிழந்த போலீசின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், டிரைவர் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான டிராக்டரின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.