ரிசர்வ் வங்கிக்கு புதிய துணை கவர்னராக பூனம் குப்தா நியமனம்
ரிசர்வ் வங்கிக்கு புதிய துணை கவர்னராக பூனம் குப்தா நியமனம்
ADDED : ஏப் 02, 2025 08:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ரிசர்வ் வங்கியின் புதிய துணை கவர்னராக பூனம் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பூனம் குப்தா, உலகளாவிய பொருளாதாரப் பின்னணி கொண்டவர்.உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகளில் பணியாற்றி 20 ஆண்டுகள் அனுபவம் உடையவர். மேலும் மத்திய அரசின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
டில்லியில் என்.சி.ஏ.இ.ஆர் எனப்படும் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரலாக இருந்தார்.
புதிய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கீழ் ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதங்களைக் குறைத்துள்ள ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழுவில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

