ADDED : மார் 29, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: துறைமுகம் தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதற்கு முறையான வழிமுறைகளை வழங்கும் மசோதா, லோக்சபாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சருமான சர்பானந்த சோனோவால், லோக்சபாவில் நேற்று, இந்திய துறைமுக மசோதா - 2025ஐ தாக்கல் செய்தார்.
அதன் முக்கிய அம்சங்கள்:
துறைமுகங்கள் தொடர்பான சட்டத்தை ஒருங்கிணைப்பது; ஒருங்கிணைந்த துறைமுக மேம்பாட்டை ஊக்குவித்தல்; வணிகம் செய்வதை எளிதாக்குதல்
பெரிய துறைமுகங்கள் தவிர பிற துறைமுகங்களை திறம்பட நிர்வகிக்க, மாநில கடல்சார் வாரியங்களை நிறுவுதல் மற்றும் அதிகாரம் அளித்தல்
துறைமுகங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்.