sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோடையில் மின் வெட்டு? அமைச்சர் ஜார்ஜ் மறுப்பு!

/

கோடையில் மின் வெட்டு? அமைச்சர் ஜார்ஜ் மறுப்பு!

கோடையில் மின் வெட்டு? அமைச்சர் ஜார்ஜ் மறுப்பு!

கோடையில் மின் வெட்டு? அமைச்சர் ஜார்ஜ் மறுப்பு!

2


ADDED : ஜன 23, 2025 05:07 AM

Google News

ADDED : ஜன 23, 2025 05:07 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகல்கோட்: “மாநிலத்தில் தேவையான அளவு மின்சாரம் உற்பத்தியாவதால், இம்முறை கோடை காலத்தில் மின்தடை இருக்காது,” என, மின்சாரத்துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து, பாகல்கோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மாநிலத்தில் வறட்சி சூழ்நிலை இருந்தபோதே, மின் வெட்டு இருக்கவில்லை, இம்முறையும் மின் வெட்டு இருக்காது. தேவைக்கு தகுந்தபடி மின்சாரம் வினியோகிக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. போதுமான அளவில் மின்சாரம் உற்பத்தியாவதால், மின் வெட்டு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது.

ஒருவேளை கோடை காலத்தில் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டால், வேறு மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவோம். இம்முறை கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

எந்த பிரச்னையும் இல்லாமல், மின்சாரம் வினியோகிக்க இப்போதிருந்தே நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுகுறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டு அணைகளில் போதுமான தண்ணீர் இருப்புள்ளது. இதனால் நீர் மின் உற்பத்தியும் திருப்திகரமாக உள்ளதால், மின் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு குறைவு. ஆளுங்கட்சியில் எந்த குழப்பங்களும் இல்லை. குழப்பங்களை ஊடகங்களே உருவாக்குகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us