sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடுகள்: ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா!

/

ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடுகள்: ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா!

ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடுகள்: ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா!

ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடுகள்: ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா!

23


ADDED : செப் 25, 2024 03:21 PM

Google News

ADDED : செப் 25, 2024 03:21 PM

23


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஆசியாவின் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா 3வது இடத்தை பிடித்து உள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த லோவி என்ற நிறுவனம் புவிசார் அரசியலை சமாளிக்கும் திறனை வைத்து ஆசியாவில் சக்திவாய்ந்த நாடுகள் (Asia Power Index) பட்டியலை தயாரித்து உள்ளது. ஆசியா - பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 27 நாடுகளின் பொருளாதார திறன், ராணுவ திறன் மற்றும் மற்ற ராஜதந்திர செல்வாக்கு ஆகியவை அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இப்பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது

2வது இடத்தில் சீனா

3வது இடத்தில் இந்தியா

4வது இடத்தில் ஜப்பான்

5வது இடத்தில் ஆஸ்திரேலியா

6வது இடத்தில் ரஷ்யா

7 வது இடத்தில் தென் கொரியா

8 வது இடத்தில் சிங்கப்பூர்

9 வது இடத்தில் இந்தோனேஷியா

10 வதுஇடத்தில் தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

இதற்கு முன்பு இந்தியா 4வது இடத்தில் இருந்தது. இந்தாண்டு, ஜப்பானை பின்னுக்கு தள்ளி 3வது இடத்திற்கு முன்னேறி இந்தியா சாதனை படைத்து உள்ளது.

இது தொடர்பாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது: ஜப்பான் மற்றும் சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இளம் தலைமுறையினர் காரணமாக, வரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதுடன், வேலைபார்ப்பவர்களின் எண்ணிக்கையும் உயரும்.

தூதரக ரீதியிலும், பிராந்திய பாதுகாப்பிலும் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. குவாட் போன்ற அமைப்புகளில் இடம் பெற்றுள்ளது, பிராந்திய பேச்சுவார்த்தைகளில் தலைமைப்பண்பு ஆகியவை காரணமாக பிராந்திய பாதுகாப்பில் இந்தியாவின் நிலை வலிமை ஆகி உள்ளது. இதற்காக எந்த ராணுவ ரீதியிலும் எந்த நாட்டுடனும் கூட்டணி வைக்கவில்லை. பிலிப்பைன்சுக்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி உள்ளிட்ட பாதுகாப்பு ஒப்புந்தங்கள் இந்தியாவின் விரிவடைந்துவரும் புவிசார் அரசியல் நோக்கங்களை எடுத்து காட்டுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பிடித்து உள்ளது. கோவிட் பெருந்தொற்றுக்கு பின்பு, இந்தியாவின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவு மீண்டது. இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் மாபெரும் வலிமையான ஜிடிபி வளர்ச்சி காரணமாக 3வது பெரிய பொருளாதாரமாக உருவாக இந்தியா உருவெடுத்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us