sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அ.தி.மு.க.,வில் நீடிக்கும் ப.பேட்டை செயலர்

/

அ.தி.மு.க.,வில் நீடிக்கும் ப.பேட்டை செயலர்

அ.தி.மு.க.,வில் நீடிக்கும் ப.பேட்டை செயலர்

அ.தி.மு.க.,வில் நீடிக்கும் ப.பேட்டை செயலர்


ADDED : நவ 20, 2024 12:12 AM

Google News

ADDED : நவ 20, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பங்கார்பேட்டை; கர்நாடக அ.தி.மு.க.,வின் வேர்களாகவும், விழுதுகளாகவும் இருந்த தொண்டர்களில் பங்கார்பேட்டை அ.தி.மு.க., செயலர் ரங்கசாமியும் ஒருவர். இவர், பல்வேறு காரணங்களால் அ.தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக, சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற கர்நாடக மாநில முன்னாள் இணை செயலர் எஸ்.எம்.பழனி, மாநில முன்னாள் அவைத் தலைவர் சிவசண்முகம் ஆகியோர் பங்கார்பேட்டையில் ரங்கசாமியை சந்தித்தனர்.

அப்போது அவர்கள், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நேசிக்கும் தொண்டர்களில், நீங்களும் ஒருவர். கர்நாடகாவுக்கு உங்களின் கட்சி பணி தேவை' என்றனர். இதை அன்புடன் ஏற்ற அவர், 'அ.தி.மு.க.,வை விட்டு விலக மாட்டேன். எப்போதும் போல், கர்நாடகாவில் கட்சி பணியை தொய்வின்றி செய்வேன்' என்றார்.

பங்கார்பேட்டை துணை செயலர் ஷாஹின்ஷா, மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் ஆல்பர்ட், ஆனந்த், ஜெகதீஷ் உட்பட கட்சியினர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us