sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 கோடிக்கணக்கானோர் சேவையில் ஈடுபட ஸ்ரீ சத்ய சாய்பாபா உந்துசக்தியாக திகழ்ந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு புகழாரம்

/

 கோடிக்கணக்கானோர் சேவையில் ஈடுபட ஸ்ரீ சத்ய சாய்பாபா உந்துசக்தியாக திகழ்ந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு புகழாரம்

 கோடிக்கணக்கானோர் சேவையில் ஈடுபட ஸ்ரீ சத்ய சாய்பாபா உந்துசக்தியாக திகழ்ந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு புகழாரம்

 கோடிக்கணக்கானோர் சேவையில் ஈடுபட ஸ்ரீ சத்ய சாய்பாபா உந்துசக்தியாக திகழ்ந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு புகழாரம்


ADDED : நவ 22, 2025 11:32 PM

Google News

ADDED : நவ 22, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புட்டபர்த்தி: “பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா, கோடிக்கணக்கான பேர் சேவையில் ஈடுபட உந்துசக்தியாக திகழ்ந்தார்” என, ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆந்திராவின் புட்டபர்த்தியில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

உலகின், 140 நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றுள்ள நிலையில், புட்டபர்த்தியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று பங்கேற்றார்.

புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் விமான நிலையத்திற்கு வந்த திரவுபதி முர்முவை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பிரசாந்தி நிலையத்தில் உள்ள ஸ்ரீ சாய் குல்வந்த் அரங்கில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகாசமாதியில் ஜனாதிபதி மரியாதை செய்தார்.

அதன்பின், பூர்ணசந்திரா ஆடிட்டோரியத்தில் ஸ்ரீ சத்யசாய் பாபாவின் நுாற்றாண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா கோடிக்கணக்கானோர் பேர் சேவையில் ஈடுபடுவதற்கு உந்துசக்தியாக இருந்தார். மனிதர்களுக்கு செய்யும் சேவையே கடவுளுக்கு செய்யும் சேவை என்று அவர் பணியாற்றினார். தன்னலமற்ற சேவையில் ஈடுபடும்படியும், ஆன்மிகத்தை பொது மக்கள் நலனுக்கு பயன்படும் வகையில் பணியாற்றுமாறும் பக்தர்களுக்கு அறிவுறுத்தினார்.

உலகம் முழுதும் கோடிக்கணக்கான பக்தர்கள் அவரது துாண்டுதலால் ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகின்றனர் என்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. அவரது போதனைகள், எக்காலத்துக்கும் மனித குலத்துக்கு பேருதவியாகவும், வழிகாட்டுதலாகவும் இருக்கும். உலகமே ஒரு கல்விக்கூடம். அதில் உண்மை, அன்பு, நன்னடத்தை, அகிம்சை, அமைதி ஆகிய ஐந்தும் தான் பாடத்திட்டம் என அவர் மனதார நம்பினார்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us