sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சியாச்சினில் ராணுவ உடையில் ஜனாதிபதி முர்மு :

/

சியாச்சினில் ராணுவ உடையில் ஜனாதிபதி முர்மு :

சியாச்சினில் ராணுவ உடையில் ஜனாதிபதி முர்மு :

சியாச்சினில் ராணுவ உடையில் ஜனாதிபதி முர்மு :

14


ADDED : செப் 26, 2024 07:09 PM

Google News

ADDED : செப் 26, 2024 07:09 PM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சியாச்சின்: உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள சியாச்சின் ராணுவ முகாமிற்கு ராணுவ உடையில் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கு, ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார்.

உலகின் மிக உயர்ந்த மற்றும் அதிக குளிர் நிறைந்த போர் முனையாக சியாச்சின் பனிமலை 23 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இங்கு நம் தேசம் காக்கும் ராணுவ வீரர்களின் முகாம் உள்ளது.

இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு , சியாச்சின் ராணுவ முகாமிற்கு வருகை தந்தார். அப்போது ராணுவ உடை அணிந்திருந்தார். அவரை ராணுவ உயரதிகாரிகள் வரவேற்றனர். அங்குள்ள போர் நினைவிடத்தில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியது, கடினமான இச்சூழலில், தாய்நாட்டை பாதுகாக்க முழு அர்ப்பணிப்புடனும், விழிப்புடனும் செயல்படும் உங்களின் தியாகத்திற்கு நான் தலை வணங்குகிறேன் என்றார்.

இதற்கு முன் சியாச்சின் ராணுவ முகாமிற்கு கடந்த 2004-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமும், 2018-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்தும் வருகை தந்துள்ளனர். இதையடுத்து சியாச்சின் ராணுவ முகாமிற்க வந்த மூன்றாவது ஜனாதிபதி திரவுபதி முர்மு என்ற பெருமை பெறுகிறார்.






      Dinamalar
      Follow us