sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எல்லை ரோந்து தொடர்பாக ஒப்பந்தம்; இந்தியா - சீனா பதற்றம் தணிய வாய்ப்பு

/

எல்லை ரோந்து தொடர்பாக ஒப்பந்தம்; இந்தியா - சீனா பதற்றம் தணிய வாய்ப்பு

எல்லை ரோந்து தொடர்பாக ஒப்பந்தம்; இந்தியா - சீனா பதற்றம் தணிய வாய்ப்பு

எல்லை ரோந்து தொடர்பாக ஒப்பந்தம்; இந்தியா - சீனா பதற்றம் தணிய வாய்ப்பு


ADDED : அக் 21, 2024 06:07 PM

Google News

ADDED : அக் 21, 2024 06:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த பதற்றம் தணியவும், எல்லையில் படைகளை குறைக்கவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவில் உள்ள கசானில் அக்டோபர் 22, 23ம் தேதி 16வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, அக்டோபர் 23ம் தேதி ரஷ்யா செல்கிறார். மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கும் நிலையில் ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், இரு தலைவர்களும் நேரில் சந்தித்து பேச வசதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையே மோதல் நடந்தது. இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான உறவுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து, இரு தரப்பு ராணுவ அதிகாரிகளும், பல்வேறு இடங்களில் சுமூக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

ஜூலை மாதத்தில் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்தனர், கடந்த செப்டம்பர் மாத கடைசியில் பீஜிங்கில் நடந்த பேச்சுவார்த்தையில் லடாக்கின் கிழக்கு பகுதி எல்லை பிரச்னை 75 சதவீதம் தீர்க்கப்பட்டதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார். கடந்த சில வாரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக, லடாக்கின் கிழக்கு பகுதி எல்லையில், ரோந்து செல்வது தொடர்பான ஒப்பந்தத்திற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இடையேயான சந்திப்பு குறித்து, இது வரை தகவல் இல்லை.

இவ்வாறு விக்ரம் மிஸ்ரி கூறினார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ''இந்த ஒப்பந்தம் மூலம், 2020 மே மாதத்துக்கு முன் எந்த எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரும் ரோந்து சென்றார்களோ, அதே நிலை இப்போது மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இரு தரப்புக்கும் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. இது, எல்லையில் அமைதி நிலவுவதற்கான அடிப்படையை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்,'' என்றார்.






      Dinamalar
      Follow us