sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் ஏஐ மாநாட்டை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

/

டில்லியில் ஏஐ மாநாட்டை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

டில்லியில் ஏஐ மாநாட்டை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

டில்லியில் ஏஐ மாநாட்டை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி


UPDATED : பிப் 16, 2026 06:52 PM

ADDED : பிப் 16, 2026 06:35 PM

Google News

UPDATED : பிப் 16, 2026 06:52 PM ADDED : பிப் 16, 2026 06:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏஐ மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 5 நாட்கள் நடக்கும் இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

ஏஐ மாநாடு கடந்த 2023 ல் பிரிட்டனின் பக்கிங்ஹாம் பிளெச்சலி பூங்காவில் நடந்தது. 2024 ல் தென் கொரியதலைநகர் சியோலிலும், 2025 ல் பிரான்ஸ் தலைநகர் பாரீசீலும் நடந்தது. இதனைத் தொடர்ந்து நமது தலைநகர் டில்லியின் பாரத் மண்டபத்தில் இம்மாநாடு துவங்கியது. இம்மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இம்மாநாடு வரும் 20ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

மாநாட்டை முன்னிட்டு, ஏஐ கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 19ம் தேதி நடக்கும் அமர்வில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.இம்மாநாட்டில் ஐநா பொதுச்செயலாளர் அன்டானியோ குட்டரஸ் கலந்து கொள்கிறார்.

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் , இலங்கை அதிபர் திசநாயக்கா, பூடான் பிரதமர் ஷெரீங் டோப்கே, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 45 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் தலைவர், பிராட் ஸ்மித், ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.மனித வள மேம்பாடு, சமுக மேம்பாடு, பாதுகாப்பான ஏஐ தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சி, பதுமை கண்டுபிடிப்பு, உள்ளிட்ட 7 துறைகள் குறத்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us