sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியாவில் பலமடைந்து வரும் கூட்டுறவு இயக்கம்: பிரதமர் மோடி பெருமிதம்

/

இந்தியாவில் பலமடைந்து வரும் கூட்டுறவு இயக்கம்: பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் பலமடைந்து வரும் கூட்டுறவு இயக்கம்: பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் பலமடைந்து வரும் கூட்டுறவு இயக்கம்: பிரதமர் மோடி பெருமிதம்

2


ADDED : நவ 25, 2024 07:08 PM

Google News

ADDED : நவ 25, 2024 07:08 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: '' இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறோம், '' என பிரதமர் மோடி கூறினார்.

டில்லியில் சர்வதேச கூட்டுறவு மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: சர்வதே கூட்டுறவு ஒத்துழைப்புக்கான மாநாடு இந்தியாவில் முதல்முறை துவங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில், நமது கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறோம்.

இம்மாநாட்டின் மூலம் இந்தியாவின் எதிர்கால கூட்டுறவுப் பயணத்தைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுவோம் என்று நம்புகிறேன். இந்தியாவில் உள்ள அனுபவம் மூலம், சர்வதேச கூட்டுறவு மாநாட்டிற்கு 21ம் நூற்றாண்டிற்கான கருவிகளையும், புதிய உணர்வையும் பெறும்.

இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் விரிவடைந்து வருகிறது. உலகை பொறுத்த வரை கூட்டுறவு என்பது ஒரு மாதிரி. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை அது கலாசாரத்தின் அடிப்படை. அது வாழ்க்கை முறையில் ஒரு அங்கம். இந்தியாவில் எட்டு லட்சம் கூட்டுறவு அமைப்புகள் உள்ளன.

அவற்றில் 98 சதவீதம் கிராமப்புற பகுதிகளில் உள்ளன. கூட்டுறவு அமைப்புகளுடன் 30 கோடி பேர் சம்பந்தப்பட்டு உள்ளனர். கூட்டுறவு என்பது சர்வதேச ஒத்துழைப்பிற்கு முக்கியமாக உலகின் தெற்கு பகுதிக்கு புதிய ஆற்றலை கொடுக்கும் என இந்தியா நம்புகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.






      Dinamalar
      Follow us