நாடு திரும்பினார் பிரதமர் மோடி; எய்ம்ஸ்-க்கு இன்று அடிக்கல்
நாடு திரும்பினார் பிரதமர் மோடி; எய்ம்ஸ்-க்கு இன்று அடிக்கல்
ADDED : பிப் 16, 2024 06:54 AM

புதுடில்லி: யு.ஏ.இ., கத்தார் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு, புதுடில்லி திரும்பினார்.
யு.ஏ.இ.,நாட்டின் அபுதாபியில் பாப்ஸ் அமைப்பின் சார்பில் பிரமாண்ட இந்துகோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க இரு நாள் பயணமாக பிரதமர் யு.ஏ.இ., சென்றார். அங்கு கோயிலை திறந்து வைத்தார்.
பின்னர் அங்கிருந்து கத்தார் சென்றார். தோஹாவில் கத்தார் பிரதமர் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இரு நாடுகள் பயணத்தை முடித்த பின், நேற்று இந்தியா புறப்பட்டார்.
இந்தியா - கத்தார் உறவில், பிரதமர் மோடியின் பயணம் புதிய அத்தியாயம் என வெளியுறவுத்துறை சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளது.
எய்ம்ஸ்-க்கு அடிக்கல்:
பிரதமர் மோடி, ஹரியானாவில் 9,750 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்டங்களை இன்று துவங்கி வைக்கிறார். இதற்காக அம்மாநிலத்திற்கு செல்லும் மோடி, ரவேரியில் 1650 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள, எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் குருகிராம் மெட்ரோ ரயில் திட்டம் (ரூ.5,450 கோடி) உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.