ADDED : பிப் 17, 2024 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி, காங்., - எம்.பி., ராகுல் மேற்கொண்டுள்ள பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை பீஹாரில் நிறைவடைந்த நிலையில், நேற்று மாலை உத்தர பிரதேசத்திற்குள் நுழைந்தது.
இந்நிகழ்வில் அக்கட்சியின் பொதுச் செயலரும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா, 52, பங்கேற்க இருந்தார். இதற்கிடையே, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால், தன் சகோதரரின் யாத்திரையில் பங்கேற்கவில்லை என்றும், சமூக வலைதளத்தில் பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.
'உடல்நலம் தேறியதும் யாத்திரையில் பங்கேற்பேன்' என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.