sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாகிஸ்தான் ஆதரவு பேச்சு : சர்ச்சையில் பரூக் அப்துல்லா

/

பாகிஸ்தான் ஆதரவு பேச்சு : சர்ச்சையில் பரூக் அப்துல்லா

பாகிஸ்தான் ஆதரவு பேச்சு : சர்ச்சையில் பரூக் அப்துல்லா

பாகிஸ்தான் ஆதரவு பேச்சு : சர்ச்சையில் பரூக் அப்துல்லா

20


UPDATED : மே 06, 2024 10:27 PM

ADDED : மே 06, 2024 10:22 PM

Google News

UPDATED : மே 06, 2024 10:27 PM ADDED : மே 06, 2024 10:22 PM

20


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர் : 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் பேசினார்.அப்போது, 'பாகிஸ்தானில் தற்போதுள்ள நிலைமையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தாங்களாகவே,இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவிப்பர்' என, குறிப்பிட்டார்.நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முன்பும், தற்போதும், எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்' என,கூறியிருந்தார்.

இது குறித்து, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கூறியுள்ளதாவது:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவுடன் இணையும் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அப்படி அவர் கூறுவது உண்மையானால், இணைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கட்டும்; யார் அவரை

தடுக்கின்றனர்.

ஆனால், ஒன்றை அவர் நினைவில் வைத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் கைகளில் வளையல் அணிந்திருக்கவில்லை. மேலும் அவர்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. அது நம்

தலையில்தான் விழும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். இவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us