sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சுங்கச்சாவடியில் விலக்கு கோரி டில்லியில் போராட்டம்

/

சுங்கச்சாவடியில் விலக்கு கோரி டில்லியில் போராட்டம்

சுங்கச்சாவடியில் விலக்கு கோரி டில்லியில் போராட்டம்

சுங்கச்சாவடியில் விலக்கு கோரி டில்லியில் போராட்டம்


ADDED : ஆக 26, 2025 10:16 PM

Google News

ADDED : ஆக 26, 2025 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:டில்லி முண்ட்கா பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி, அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

மேற்கு டில்லியில் உள்ள முண்ட்கா பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடியை வாகனங்களில் கடந்து செல்வதற்கு, இந்த பகுதியில் வசிக்கும் மக்களும் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதி மக்கள் ஏராளாமானோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர். சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சு நடத்தினர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு, அவர்கள் கலைந்து சென்றனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, சுங்கச்சாவடியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us