பெண்கள் ஆபாச படம் வரைந்து வீட்டின் முன் வைத்த 'சைக்கோ'
பெண்கள் ஆபாச படம் வரைந்து வீட்டின் முன் வைத்த 'சைக்கோ'
ADDED : டிச 11, 2024 11:40 PM
மைசூரு : பெண்களின் ஆபாச படம் வரைந்து, அவர்களின் வீட்டு முன்வைத்து, குழப்பத்தை ஏற்படுத்தி, பலரின் திருமணத்தை நிறுத்தியவர் சிக்கினார்.
மைசூரு, நஞ்சன்கூடின், ஹுல்லஹள்ளி கிராமத்தின், வரதராஜ சுவாமி லே - அவுட்டில் வசிக்கும் மக்கள், நான்கைந்து ஆண்டுகளாக விசித்திரமான பிரச்னையை சந்தித்தனர். பொழுது விடிந்தால், பலரின் வீடுகளில் மர்மமான சீட்டு கிடக்கும். அதில் அந்தந்த வீட்டுப் பெண்களை ஆபாசமாக வரையப்பட்டிருக்கும் இருக்கும்.
அதன் கீழே, அந்த பெண்ணின் பெயரை எழுதி, அநாகரீகமாக வர்ணிக்கப்பட்டிருக்கும். இதை செய்வது யார் என்பதே தெரியாமல் இருந்தது.
பெண்களின் ஆபாச படம் இருந்ததால், பல வீடுகளில் கணவன், மனைவிக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. குடும்பங்களில் குழப்பம் ஏற்பட்டது. பல இளம்பெண்களின் திருமணம் நின்றுவிட்டது.
'சைக்கோ' நபரால் கிராமத்தினரின் நிம்மதி பறிபோனது. அவரை கண்டுபிடிக்க முயற்சித்தும் முடியவில்லை. அவ்வப்போது ஏதாவது ஒரு வீட்டில், இச்சம்பவம் நடந்தது. வீ
டுகளில் வசித்த இளம்பெண்கள், எப்போது நம்மை பற்றி தகாத முறையில் எழுதி, நம் மானம், மரியாதையை வாங்குவாரோ என, பயத்துடன் நாட்களை கடத்தினர்.
கிராமத்து இளைஞர்கள், சைக்கோவை பிடிக்க இரவில் கண்காணிக்க துவங்கினர். நேற்று முன் தினம் நள்ளிரவில், இளைஞர்கள் கிராமத்தை சுற்றி வந்தனர். அப்போது முகத்தை மூடியபடி சைக்கிளில் வந்த நபர், ஒரு வீட்டு முன் நின்று சீட்டு வைக்க முற்பட்டபோது, அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவரது முகத்தை திறந்து பார்த்தபோது, அவர் அதே கிராமத்தை சிவண்ணா, 40, என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இவர் ஊரில் முக்கிய புள்ளியாக வலம் வந்தவர்.
'சைக்கோ நபரை பிடிக்க வேண்டும்' என, குரல் கொடுத்தவர். ஆனால் இவரே சைக்கோவாக இருந்ததை கண்டு இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவரை அடித்து, உதைத்து ஹுல்லஹள்ளி போலீஸ் நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்தனர். கிராமத்தின் பெண்கள் நிம்மதி அடைந்தனர்.