sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மீண்டும் பணி கேட்டு மனு மக்கள் நல பணியாளர் வழக்கு தள்ளுபடி

/

மீண்டும் பணி கேட்டு மனு மக்கள் நல பணியாளர் வழக்கு தள்ளுபடி

மீண்டும் பணி கேட்டு மனு மக்கள் நல பணியாளர் வழக்கு தள்ளுபடி

மீண்டும் பணி கேட்டு மனு மக்கள் நல பணியாளர் வழக்கு தள்ளுபடி


ADDED : செப் 03, 2025 12:15 AM

Google News

ADDED : செப் 03, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தை சேர்ந்த மக்கள் நலப்பணியாளர்கள் மறுவாழ்வு சங்கம் சார்பில் தொடரப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில், பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்களை மீண்டும் அதே பணியில் அமர்த்தி ஊதிய உயர்வு வழங்கக் கோரி, மக்கள் நலப்பணியாளர்கள் மறுவாழ்வு சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை, 2023, ஏப்ரல் மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், 'மக்கள் நலப்பணியாளர்களுக்கான வேலை திட்டத்தை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துடன் இணைத்து செயல்படுத்த வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்' என, தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்த மக்கள் நலப்பணியாளர்கள் மறுவாழ்வு சங்கம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துடன் தங்களை இணைக்கக் கூடாது என்றும், தனியாக பணி வழங்க வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது.

இந்த சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது, 'ஏற்கனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர விரும்பவில்லை' எனக் கூறி, சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

- டில்லி சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us