
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆதாயம் தேட முயற்சி!
பா.ஜ.,வின் கோரிக்கையை ஏற்று, நகரின் 1,731 அங்கீகரிக்கப்படாத காலனிகளுக்கு மின் இணைப்பு வழங்க டில்லி மேம்பாட்டு ஆணையம் உட்பட எந்த அமைப்பின் தடையில்லாச்சான்றும் தேவையில்லை என, துணைநிலை கவர்னர் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் இந்த விவகாரத்தில் பொய்யாகக் கூறி, ஆதாயம் தேட முதல்வர் ஆதிஷி முயற்சி செய்கிறார்.
மனோஜ் திவாரி,
எம்.பி., - பா.ஜ.,
ஆம் ஆத்மி அரசாங்கத்தின் கீழ் உள்ள மின்வாரியங்கள் என்.ஓ.சி., கேட்டு நிர்பந்தித்தன. துணைநிலை கவர்னரை சந்தித்து பா.ஜ., - எம்.பி.,க்கள் இந்த பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தினர். என்.ஓ.சி.,யை ரத்து செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடந்த 6ம் தேதி புராரியில் பொதுமக்கள் பொதுக்கூட்டம் நடந்தினர் என்பதை முதல்வர் மறந்துவிட்டார்.
வீரேந்திர சச்தேவா,
பா.ஜ., தலைவர்