sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புல்வாமா பயங்கரவாதி மாரடைப்பில் பலி

/

புல்வாமா பயங்கரவாதி மாரடைப்பில் பலி

புல்வாமா பயங்கரவாதி மாரடைப்பில் பலி

புல்வாமா பயங்கரவாதி மாரடைப்பில் பலி


ADDED : செப் 25, 2024 12:52 AM

Google News

ADDED : செப் 25, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜம்மு,

கடந்த 2019ல் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 2,547 துணை ராணுவப் படை வீரர்களுடன் 78 ராணுவ வாகனங்கள் வரிசையாக சென்றன.

அவை, புல்வாமா பகுதியில் சென்றபோது, வெடிகுண்டு நிரப்பப்பட்ட ஒரு கார் மோதிய வேகத்தில், ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து வெடித்துச் சிதறியது.

இதில், 40 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் - இ - முகமது பொறுப்பேற்றது. இந்த வழக்கை, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வரும் நிலையில் இதுவரை 19 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில், ஹாஜிபல் கிராமத்தைச் சேர்ந்த பிலால் அகமது குச்சே, 32, என்பவரும் கைது செய்யப்பட்டு, கிஷ்த்வார் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us