sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ராகுல் பச்சைக்கொடி

/

தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ராகுல் பச்சைக்கொடி

தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ராகுல் பச்சைக்கொடி

தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ராகுல் பச்சைக்கொடி

10


ADDED : டிச 01, 2024 05:06 AM

Google News

ADDED : டிச 01, 2024 05:06 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஹரியானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்., தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பச்சைக்கொடி காட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹரியானாவில் அக்டோபரில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. காங்., வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பா.ஜ., வெற்றி பெற்றது, காங்., நிர்வாகிகளை அதிர்ச்சி அடையச் செய்தது.

மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான 'மஹாயுதி' கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான காங்., வெறும் 16 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அக்கட்சியின் கூட்டணி கட்சிகளும் சொற்ப இடங்களையே கைப்பற்றின.

ஹரியானா, மஹாராஷ்டிரா தேர்தல் தோல்விக்கு பின், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், டில்லியில் நேற்று முன்தினம் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கார்கே பேசுகையில், 'நாம் ஒற்றுமையுடன் செயல்படாமல், நமக்குள்ளே சண்டையிட்டு கொண்டால், நம் அரசியல் எதிரிகளை எப்படி வீழ்த்த முடியும்?

'ஹரியானா, மஹாராஷ்டிரா தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்கவும், கட்சியின் குறைபாடுகளை அடையாளம் காணவும், இரு மாநிலங்களில், சில கடினமான முடிவுகள் தவிர்க்க முடியாதவை' என்றார்.

இந்நிலையில், ஹரியானா, மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், காங்., தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றங்கள் செய்யவும், கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பச்சைக்கொடி காட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹரியானா, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு, விரைவில், காங்., ஆய்வுக் குழுவினர் செல்லவுள்ளனர். அங்கு உள்ளூர் நிர்வாகிகளை சந்தித்து, தேர்தல் தோல்விக்கான காரணங்களை கேட்கவுள்ளனர்.

அவர்கள் அளிக்கும் அறிக்கையின்படி, கட்சி தலைவர் கார்கே பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உள்ளார். இதனால், வரும் நாட்களில் ஹரியானா, மஹாராஷ்டிரா காங்கிரசில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என, கூறப்படுகிறது.

கேரளாவில் பிரியங்கா

கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதிக்கு சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில், காங்., மூத்த தலைவர் சோனியாவின் மகளும், அக்கட்சியைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் சகோதரியுமான பிரியங்கா வெற்றி பெற்றார். தேர்தல் வெற்றிக்கு பின், முதன்முறையாக, தன் சகோதரர் ராகுலுடன், இரு நாட்கள் சுற்றுப்பயணமாக, வயநாடு தொகுதிக்கு பிரியங்கா நேற்று வந்தார். கோழிக்கோடு விமான நிலையத்தில், அவருக்கு காங்., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தின் முக்கம் என்ற பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசுகையில், ''கேரளாவில் தற்போது நாங்கள் ஆட்சியில் இல்லை. அதனால் அரசு செய்யக் கூடியதை எங்களால் செய்ய முடியாது. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ, காங்., நிர்வாகிகள் கேரள அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்,'' என்றார். பிரியங்கா பேசுகையில், ''வயநாடு மக்களின்சிறந்த எதிர்காலத்தை உறுதிசெய்ய உழைக்க தயாராக இருக்கிறேன். என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன். வயநாடு மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் குரல் கொடுப்பேன்,'' என்றார்.








      Dinamalar
      Follow us