உள்ளடக்கத்திற்கு செல்ல

அதானி விவகாரத்தில் விவாதம் தேவை; மீண்டும் சொல்கிறார் ராகுல்
அதானி விவகாரத்தில் விவாதம் தேவை; மீண்டும் சொல்கிறார் ராகுல்
ADDED : டிச 11, 2024 02:35 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: 'அதானி விவகாரத்தில் மத்திய அரசு அச்சம் கொண்டுள்ளது. பார்லிமென்டில் நிச்சயம் விவாதம் தேவை,' என காங்கிரஸ் எம்.பி.,யும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கூறினார்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி துவங்கியது. கூட்டம் துவங்கி முதல் நாளில் இருந்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டில்லியில் நிருபர்கள் சந்திப்பில் ராகுல் கூறியதாவது: அதானி விவாகரத்தில் மத்திய அரசு அச்சம் கொண்டுள்ளது. பார்லிமென்டில் நிச்சயம் விவாதம் தேவை. தொழிலதிபர் கவுதம் அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதம் நடத்துவதை பா.ஜ., விரும்பவில்லை. இதை நாங்கள் விடமாட்டோம். அவர்கள் எங்கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே இருப்பார்கள்.
விவாதம்
