sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராகுலின் பேச்சை சீரியஸாக எடுத்துக்க மாட்டாங்க; நிதின் கட்கரி விமர்சனம்

/

ராகுலின் பேச்சை சீரியஸாக எடுத்துக்க மாட்டாங்க; நிதின் கட்கரி விமர்சனம்

ராகுலின் பேச்சை சீரியஸாக எடுத்துக்க மாட்டாங்க; நிதின் கட்கரி விமர்சனம்

ராகுலின் பேச்சை சீரியஸாக எடுத்துக்க மாட்டாங்க; நிதின் கட்கரி விமர்சனம்

3


ADDED : நவ 17, 2024 09:06 PM

Google News

ADDED : நவ 17, 2024 09:06 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: காங்கிரஸ் தலைவர்கள் பொறுப்பில்லாமல் பேசி வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் வரும் 20ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, பிரதமர் மோடியை, ஜோ பைடனுடன் ஒப்பிட்டு பேசிய ராகுலின் கருத்துக்கு அவர் பதிலளித்ததாவது: ராகுலின் இதுபோன்ற பேச்சுக்களை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. அவருடைய குற்றச்சாட்டுக்களையும் மக்கள் பெரிதுபடுத்திக் கொள்வதில்லை என்று நினைக்கிறேன். காங்கிரஸ் தலைவர்கள் பொறுப்பில்லாமல் பேசி வருகின்றனர்.

லோக்சபா தேர்தல் சமயத்தில் பா.ஜ., 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால், அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை மாற்றியமைத்து விடுவார்கள் என்ற பிம்பத்தை உருவாக்கி விட்டார்கள். அரசியலமைப்பை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் அதனை செய்ய மாட்டோம். வேறு யாரையும் செய்ய அனுமதிக்க மாட்டோம்.

லோக்சபா தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் பொய் வாக்குறுதிகளை கொடுத்ததை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர். எனவே, பிரதமர் மோடி தலைமையிலான மஹாயுதி கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கொடுக்க துவங்கி விட்டனர், என்றார்.

சாதிவாரி கணக்கெடுப்பை ராகுல் வலியுறுத்துவது குறித்து கட்கரி பேசுகையில், 'உண்மையான பிரச்னை என்னவென்றால், ஏழைகள், கிராமங்கள் மற்றும் விவசாயிகள் நலன் பற்றியது தான். ஏழைகளில் சாதி, மதம் என்ற வேறுபாடு கிடையாது,' எனக் கூறினார்.






      Dinamalar
      Follow us