sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாயமாகும் ராகுல் அணி: காங்.,கில் இருந்து வெளியேறிய 12 பெரிய தலைவர்கள்

/

மாயமாகும் ராகுல் அணி: காங்.,கில் இருந்து வெளியேறிய 12 பெரிய தலைவர்கள்

மாயமாகும் ராகுல் அணி: காங்.,கில் இருந்து வெளியேறிய 12 பெரிய தலைவர்கள்

மாயமாகும் ராகுல் அணி: காங்.,கில் இருந்து வெளியேறிய 12 பெரிய தலைவர்கள்


UPDATED : ஜன 14, 2024 05:53 PM

ADDED : ஜன 14, 2024 05:49 PM

Google News

UPDATED : ஜன 14, 2024 05:53 PM ADDED : ஜன 14, 2024 05:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா, காங்கிரசில் இருந்து விலகி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தார். லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், இது காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டில் இருந்து தற்போது வரை அக்கட்சியில் இருந்து 12 பெரிய தலைவர்கள் விலகி உள்ளனர்.

அவர்களின் பட்டியல் பின்வருமாறு

மிலிந்த் தியோரா

Image 1219395

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் முரளி தியோராவின் மகனான மிலிந்த் தியோரா மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் . மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக உத்தவ் தாக்கரே தரப்பினர் நடவடிக்கை காரணமாக அதிருப்தியில் இருந்தார். தற்போது அவர் கட்சியில் இருந்து விலகி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்துள்ளார்.

ஹர்திக் படேல்

Image 1219396குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தில் செல்வாக்கு பெற்ற ஹர்திக் படேல், 2019 ல் ராகுலின் முயற்சியால் காங்கிரசில் இணைந்தார். ஆனால், 2022ல் அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகளின் நடவடிக்கை பிடிக்காததால், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார்.

அஸ்வனி குமார்


முன்னாள் மத்திய அமைச்சரான இவர், 2022ல் காங்கிரசில் இருந்து விலகினார். 2019 ல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் அதிருப்தியில் இருந்து வந்த அவர், பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னர் கட்சியில் இருந்து விலகினார்.

சுனில் ஜாகர்

Image 1219397

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் சுனில் ஜாகர். அம்மாநில காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த சரண்ஜித் சிங் சன்னியை விமர்சனம் செய்ததற்காக சனில் ஜாகருக்கு மேலிடம் நோட்டீஸ் அனுப்பியது. இதனால், அவர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். அவருக்கு மாநில தலைவர் பதவியை பா.ஜ., வழங்கியது.

ஆர்பிஎன் சிங்

Image 1219398முன்னாள் மத்திய அமைச்சரான ஆர்பிஎன் சிங், 2022ல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். உ.பி.,யில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அவர், தேர்தல் நேரத்தில் பிரியங்கா தலைமையிலான பிரசார குழுவில் இடம் கிடைக்காததால், அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார்.

ஜோதிராதித்யா சிந்தியா

Image 1219399ம.பி., அரச குடும்பத்தை சேர்ந்தவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமன மாதவ்ராவ் சிந்தியாவின் மகனான ஜோதிராதித்யா சிந்தியாவும் காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய அமைச்சராக இருந்தார். ம.பி.,யில் கமல்நாத் தலைமையில் ஆட்சியில் இருந்தபோது, முதல்வர் மீது அதிருப்தி காரணமாக காங்கிரசில் இருந்து விலகி பாஜ.,வில் இணைந்து மத்திய அமைச்சர் ஆனார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், 2020 ல் ம.பி.,யில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

ஜிதின் பிரசாதா

Image 1219400மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சரும் ராகுலுக்கு நெருக்கமானவருமான ஜிதின் பிரசாதாவும் கடந்த 2021ல் உ.பி., தேர்தலுக்கு முன்னர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார்.

அல்பேஷ் தாக்கூர்

Image 1219401குஜராத் மாநில முன்னாள் எம்.எல்.ஏ.,வான அல்பேஷ் தாக்கூர், காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவை மீறி ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டு போட்டார். 2019 ல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

அனில் அந்தோணி

Image 1219402

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அனில் அந்தோணி, கடந்த ஆண்டு ஜன.,மாதம் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். இதற்கு அவரது தந்தை அதிருப்தி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us