ADDED : அக் 31, 2024 07:41 AM

பெங்களூரு; அடுத்த ஐந்து நாட்கள், கர்நாடகாவில் பரவலாக மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு உட்பட, மாநிலம் முழுதும் தற்போது மழை குறைந்துள்ளது. ஆனால் அடுத்த ஐந்து நாட்கள், பரவலாக கன மழைக்கு வாய்ப்புள்ளது. சில மாவட்டங்களில் நவம்பர் 1 மற்றும் 2ம் தேதி அன்று, கனமழை பெய்யும் அறிகுறிகள் தென்படுகின்றன. மற்ற நாட்களில் சாதாரண மழை பெய்யக்கூடும்.
நாளை (இன்று) தார்வாட், கலபுரகி, யாத்கிர் மாவட்டங்களில், லேசான மழை பெய்யும். அடுத்த இரண்டு நாட்கள், தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, சிக்கமகளூரு, ஷிவமொக்கா, மைசூரு, மாண்டியா, குடகு ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
ராம்நகர், பெங்களூரு, சித்ரதுர்கா, தாவணகெரே, கோலார், ராம்நகர், விஜயநகரா, தார்வாட், பீதர், பெலகாவி, யாத்கிர், கலபுரகி, சிக்கபல்லாபூர் ஆகிய மாவட்டங்களில் சாதாரண மழை பெய்யலாம். மழையுடன், காலை மற்றும் மாலை நேரத்தில் குளிரும் அதிகமாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

