sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மராத்தி பேச தெரியாத வங்கி அதிகாரிகளின் கன்னத்தில் அறைந்த ராஜ் தாக்கரே கட்சியினர்

/

மராத்தி பேச தெரியாத வங்கி அதிகாரிகளின் கன்னத்தில் அறைந்த ராஜ் தாக்கரே கட்சியினர்

மராத்தி பேச தெரியாத வங்கி அதிகாரிகளின் கன்னத்தில் அறைந்த ராஜ் தாக்கரே கட்சியினர்

மராத்தி பேச தெரியாத வங்கி அதிகாரிகளின் கன்னத்தில் அறைந்த ராஜ் தாக்கரே கட்சியினர்

14


ADDED : ஏப் 04, 2025 04:05 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 04:05 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புனே: 'மராத்தி பேசத் தெரியாதவர்களின் கன்னத்தில் அறையுங்கள்' என தன் கட்சியினருக்கு, எம்.என்.எஸ்., தலைவர் ராஜ் தாக்கரே உத்தரவிட்ட சில நாட்களில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு வங்கிகளின் மேலாளர்கள், அந்த கட்சியினரால் தாக்கப்பட்டனர்.

தடுமாற்றம்


மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா எனும் எம்.என்.எஸ்., கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே. சமீபத்தில் அவர், 'மராத்தி பேசத் தெரியாதவர்களின் கன்னத்தில் அறையுங்கள்' என, தன் கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், புனே அருகே உள்ள ஸ்டேட் வங்கி கிளைக்குள் நுழைந்த எம்.என்.எஸ்., கட்சியினர், அங்கிருந்த மேலாளரிடம், மராத்தியில் பேசும்படி கூறினர்; அவர் தடுமாறினார். அவரை காப்பாற்றும் நோக்கத்தில் வந்த மராத்தி மொழி அறிந்த ஊழியரை அடித்து, அறைக்குள் தள்ளி பூட்டினர். பின், அந்த வங்கியின் மேலாளரை கன்னத்தில் அறைந்தனர்.

வலியுறுத்தல்


அதுபோல, மும்பை அருகே உள்ள அம்பர்நாத் என்ற நகரில் உள்ள பாங்க் ஆப் மஹாராஷ்டிரா கிளைக்குள் புகுந்த எம்.என்.எஸ்., கட்சியினர், அங்கிருந்த மேலாளர் அறைக்குள் புகுந்து, அவரை மராத்தி மொழியில் பேசும்படி கூறினர்.

அந்த அதிகாரி தடுமாறவே, அவரை கன்னத்தில் அறைந்த எம்.என்.எஸ்., கட்சியினர், மராத்தி மொழிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய பின் கலைந்து சென்றனர். இந்த இரண்டு தாக்குதல் சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சிலரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

மாநிலத்தின் பல இடங்களில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு செல்லும் எம்.என்.எஸ்., கட்சியினர், தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், மராத்தி மொழியில் பேச வேண்டும் என வலியுறுத்தி, நோட்டீஸ் அளித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us