sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விண்வெளி வீரர் சுக்லாவை அவமதித்த எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் கண்டனம்

/

விண்வெளி வீரர் சுக்லாவை அவமதித்த எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் கண்டனம்

விண்வெளி வீரர் சுக்லாவை அவமதித்த எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் கண்டனம்

விண்வெளி வீரர் சுக்லாவை அவமதித்த எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் கண்டனம்

1


ADDED : ஆக 19, 2025 05:43 AM

Google News

ADDED : ஆக 19, 2025 05:43 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணத்தை கவுரவிக்கும் வகையில், பார்லி.,யில் நேற்று சிறப்பு விவாதம் நடந்தது. அதை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கோபமடைந்த ராணுவ அ மைச்சர் ராஜ்நாத் சிங், 'எதிர்க்கட்சிகளின் நடத்தை மிகவும் ஏமாற்றமளிக் கிறது' என குறிப்பிட்டார்.

அமெரிக்காவின், 'ஆக்சியம் 4' திட்டத்தின் கீழ், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர், ஜூன் 25ல், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.

இதன் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார். 18 நாட்கள் விண்வெளியில் தங்கி ஆய்வு செய்த அவர்கள், ஜூலை 15ல் பூமிக்கு திரும்பினர். இந்த பயணத்துக்கு பின், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சமீபத்தில் தாயகம் திரும்பினார்.

இந்நிலையில், லோக்சபாவில் நேற்று, சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணத்தை கவுரவிக்கும் வகையில் சிறப்பு விவாதம் நடந்தது. அப்போது, தேர்தல் கமிஷனை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு செய்தன.

பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பேசுகையில், ''அரசின் மீது எதிர்க்கட்சிகளுக்கு கோபம் இருக்கலாம். ஆனால் நம்மை எல்லாம் பெருமைப்படுத்திய வீரரை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது, மிகவும் வருத்தம் அளிக்கிறது,'' என்றார்.

இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவை பாராட்டி பேசினர். பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:

நம் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் குறித்து, லோக்சபாவில் சிறப்பு விவாதம் நடந்த போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டது, மிகவும் துரதிருஷ்டவசமானது.

முக்கியத்துவம் வாய்ந்த விவாதத்தை தடுக்க எதிர்க்கட்சிகள் நடந்து கொண்ட விதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. விண்வெளி போன்ற முக்கியமான விவகாரங்களில், அரசியலை புகுத்தக் கூடாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியுடன் சந்திப்பு

பிரதமர் மோடியை டில்லியில் உள்ள அவரது வீட்டில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா நேற்று மாலை சந்தித்தார். அப்போது, விண்வெளிக்கு சென்று வந்த தன் அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். 'ஆக்சியம் 4' திட்டத்தின் சின்னத்தையும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படங்களையும் பி ரதமர் மோடிக்கு சுபான்ஷு சுக்லா பரிசளித்தார்.








      Dinamalar
      Follow us