sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ்: நிராகரித்தார் ராஜ்ய சபா தலைவர்

/

அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ்: நிராகரித்தார் ராஜ்ய சபா தலைவர்

அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ்: நிராகரித்தார் ராஜ்ய சபா தலைவர்

அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ்: நிராகரித்தார் ராஜ்ய சபா தலைவர்

7


ADDED : மார் 27, 2025 04:35 PM

Google News

ADDED : மார் 27, 2025 04:35 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக, சில எதிர்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த உரிமை மீறல் நோட்டீஸை, துணை ஜனாதிபதியும் ராஜ்யசபாவின் தலைவருமான ஜக்தீப் தன்கர் நிராகரித்தார்.

சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பேரிடர் மேலாண்மை மசோதா 2024 மீதான விவாதத்தின் போது பிரதமரின் தேசிய நிவாரண நிதி குறித்து , அமித் ஷா பார்லிமென்டில் தவறான அறிக்கைகளை முன்வைத்ததாகவும், உறுப்பினர்களின் சலுகைகளை மீறியதாகவும் குற்றம் சாட்டினர். உரிமை மீறல் நோட்டீசும் அளித்திருந்தனர்.

இது தொடர்பாக ராஜ்ய சபா தலைவர் ஜக்தீப் தன்கர் பேசியதாவது: அமித் ஷாவுக்கு எதிரான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

நற்பெயரைக் கெடுக்க பார்லிமென்ட் தளங்களை தவறாகப் பயன்படுத்துவது கவலை அளிக்கிறது. பார்லிமென்ட் நெறிமுறைகள் குறித்த எஸ்.பி. சவுகான் அறிக்கையின்படி, உறுப்பினர்கள் ஒழுக்கத்தையும் தனிப்பட்ட நம்பகத்தன்மையையும் நிலைநிறுத்த வேண்டும்.

பார்லிமென்ட் விவாதங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அது சலுகை மீறல் அல்ல. இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லாததால் நிராகரிக்கப்படுகிறது.

இவ்வாறு ஜக்தீப் தன்கர் பேசினார்.






      Dinamalar
      Follow us