ADDED : ஜன 09, 2025 10:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு:சிருங்கேரி ஸ்ரீ ஆதிசங்கர அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சங்கரா கல்லூரி அசோசியேஷன் காலடி அறக்கட்டளையின் இயக்குனராக, கரிம்புழை ராமன் நியமிக்கப்பட்டார்.
கேரள மாநிலம், எர்ணா குளத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது, சிருங்கேரி ஸ்ரீ ஆதிசங்கர அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சங்கரா கல்லுாரி அசோசியேஷன் காலடி அறக்கட்டளை.
கல்லுாரி நிறுவனம் மற்றும் சமூக நலத் தொண்டுகள் செய்து வரும் இந்த அறக்கட்டளையின் இயக்குனராக, பாலக்காடு மாவட்டம் கல்பாத்தியைச் சேர்ந்த கரிம்புழை ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், கேரள கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழகம், 'கெயர் கேரளா' ஆகிய அரசு நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக பணியாற்றியவர். நீண்ட காலம் மாநில முற்போக்கு நலக் கழகத்தின் இயக்குனராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

