ADDED : டிச 17, 2024 10:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:ரமண மகரிஷியின் 145--வது ஜெயந்தி, லோதி சாலை ரமண கேந்திரத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காலை 9:00 மணிக்கு குரு வந்தனம் மற்றும் கணபதி பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து கலச ஸ்தாபனம், ருத்ர நமகம், புருஷ ஸூக்தம், ரமண அஷ்டோத்திர பூஜை, தைத்ரீய உபநிடத பாராயணம் நடந்தது. சந்திரசேகர் தலைமையில், வேத விற்பன்னர்கள் மற்றும் ரித்விக்குகள் பாராயணம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் ரமணர் உபதேசம் வாசித்தனர். விதுஷி ஜெயந்தி அய்யர் அட்சர ரமண மாலை மற்றும் ரமணர் பஜனை பாடல்ள் பாடினார்.