sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 30, 2025 ,கார்த்திகை 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராம்தேவ் தனி உலகில் வாழ்கிறார்: சர்பத் வழக்கில் கோர்ட் கண்டனம்

/

ராம்தேவ் தனி உலகில் வாழ்கிறார்: சர்பத் வழக்கில் கோர்ட் கண்டனம்

ராம்தேவ் தனி உலகில் வாழ்கிறார்: சர்பத் வழக்கில் கோர்ட் கண்டனம்

ராம்தேவ் தனி உலகில் வாழ்கிறார்: சர்பத் வழக்கில் கோர்ட் கண்டனம்

11


ADDED : மே 02, 2025 01:07 AM

Google News

ADDED : மே 02, 2025 01:07 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சர்பத் விளம்பரத்தில் வெறுப்பு பிரசாரம் மேற்கொண்ட விவகாரத்தில், 'ராம்தேவ் தனி உலகில் வாழ்கிறார்' என, டில்லி உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பதஞ்சலி என்ற பெயரில் மருந்துகள், வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரித்து யோகா குரு பாபா ராம்தேவ் விற்பனை செய்து வருகிறார். கொரோனா காலத்தில், அதற்கு மருந்து இருப்பதாகக் கூறி பதஞ்சலி மருந்துகளை இவர் விற்பனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பதஞ்சலி தயாரிப்புகள் குறித்து தவறாக விளம்பரம் செய்து விற்பனை செய்யப்படுவதாக மருத்துவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் ராம்தேவை கண்டித்தது. இந்த சூழலில், வட மாநிலங்களில் பிரபலமான ரூஹ் அப்சா சர்பத் தயாரிக்கும் நிறுவனத்துக்கு எதிராக வீடியோ விளம்பரம் ஒன்றை ராம்தேவ் நிறுவனம் வெளியிட்டது.

அதில், 'ஒரு கம்பெனி சர்பத் விற்ற பணத்தில் மசூதி, மதரசா கட்டுகிறது. நீங்கள் அந்த சர்பத்தை குடித்தால் மசூதியும், மதரசாவும் கட்டப்படும். 'பதஞ்சலியின் ரோஸ் சர்பத்தைக் குடித்தால் குருகுலம், பதஞ்சலி பல்கலை கட்டப்படும். லவ் ஜிஹாத், ஓட்டு ஜிஹாத் போலவே, ஒரு சர்பத் ஜிஹாத்தும் நடக்கிறது' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் ரூஹ் அப்சா சர்பத் தயாரிக்கும் ஹாம்தார்த் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த 22ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அந்த விளம்பரத்தை திரும்பப் பெறுவதாக ராம்தேவ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி கூறுகையில், 'சர்ச்சைக்குரிய வகையில் எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது என, ராம்தேவுக்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதை மீறும் வகையில் அவர் மீண்டும் மீண்டும் செயல்பட்டு வருகிறார்.

'சர்பத் விளம்பரத்தின் பின்னணியில் ராம்தேவ் இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல், தனி உலகில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி, நீதிமன்றத்துக்கு வரவழைப்பதை தவிர வேறு வழியில்லை' என, குறிப்பிட்டார்.

இதையடுத்து, ராம்தேவுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us