sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மே.வங்கத்தில் சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்

/

மே.வங்கத்தில் சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்

மே.வங்கத்தில் சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்

மே.வங்கத்தில் சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்

28


ADDED : ஜன 05, 2024 11:03 AM

Google News

ADDED : ஜன 05, 2024 11:03 AM

28


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் ரேஷன் ஊழல் தொடர்பாக சோதனை மேற்கொள்ள சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கினர்.

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு ரேஷன் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த பல மாதங்களாக சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஜன.,5) காலை, திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த ஷாஜகான் ஷேக் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொள்ள புறப்பட்டு சென்றனர்.

சந்தேஷ்காலி பகுதி அருகே சென்றபோது, அப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்கள் 200க்கும் மேற்பட்டோர் அமலாக்கத்துறை அதிகாரிகள், துணை ராணுவ படை வீரர்களை சுற்றி வளைத்து தாக்கியதுடன், விரட்டி அடித்தனர். இதில் அவர்களின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதமானது; சில அதிகாரிகளுக்கு தலையில் ரத்தம் கொட்டியது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகளை பொதுமக்கள் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us