sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விவாதத்திற்கு தயாரா? பிரியங்காவிற்கு ஸ்மிருதி இரானி சவால்

/

விவாதத்திற்கு தயாரா? பிரியங்காவிற்கு ஸ்மிருதி இரானி சவால்

விவாதத்திற்கு தயாரா? பிரியங்காவிற்கு ஸ்மிருதி இரானி சவால்

விவாதத்திற்கு தயாரா? பிரியங்காவிற்கு ஸ்மிருதி இரானி சவால்

9


ADDED : மே 09, 2024 12:05 PM

Google News

ADDED : மே 09, 2024 12:05 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமேதி: நாட்டு நலன் தொடர்பான பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி பேசுவது இல்லை என்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, எந்த விவகாரங்கள் குறித்தும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த டிவியிலும் விவாதத்திற்கு பிரியங்காவும், ராகுலும் தயாரா எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று ( மே 08) அளித்த பேட்டியில், பயனற்ற பிரச்னைகளை பற்றி மட்டுமே பிரதமர் மோடி பேசுகிறார். வேலை வாய்ப்பு, பண வீக்கம், பெண்கள் மீதான அட்டூழியங்கள் ஆகியவற்றை பற்றியும் பேசுமாறு அவருக்கு நான் சவால் விடுகிறேன் எனக்கூறியிருந்தார்.

இதனை மறுத்து அமேதி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது: எந்த விவகாரங்கள் குறித்தும் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பா.ஜ., உடன் ராகுலும், பிரியங்காவும் விவாதம் நடத்தட்டும். இதற்கான டிவி சேனலை அவர்களே தேர்வு செய்யட்டும். ஒரு பக்கம் ராகுலும், பிரியங்காவும் அமரட்டும். மறுபுறம் பா.ஜ., செய்தித் தொடர்பாளர் அமருட்டும். அனைத்தும் தெளிவடையும். எங்களது கட்சியை பொறுத்தவரை சுதன்ஷூ திரிவேதி மட்டும் போதும். அவர்களுக்கு அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.






      Dinamalar
      Follow us